கோவிட் சூழ்நிலை காரணமாக காரைநகரில் தற்காலிகமாக வேலையிழந்த மூவருக்கு ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவு
காரைநகரில் உணவகம் ஒன்றில் பணியாற்றிவரும் பெண் தலைமை குடும்பத்தினர், பாடசாலை செல்லும் சிறுவர்களுடன் கடந்த சில மாதங்களாக வருமானமற்ற நிலையில் செய்வதறியாது சிரமப்பட்டு வருவதாகவும், இந்த நிலையில் அவர்களுடைய பிள்ளைகளிற்கான கல்வியை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்தினை தொடர்பு கொண்டு ஆசிரியை ஒருவர் வேண்டுகோள் முன்வைத்திருந்தார்.

கடந்த சில மாதங்களாக காரைநகரில் உணவகங்கள் மூடப்பட்ட நிலையில் இதனை கேள்வியுற்றதும் உடனடியாக அவர்களிற்காக தற்காலிக உதவியாக மூன்று குடும்பங்களிற்க தலா பத்தாயிரம் வீதம் ஒரே தினத்தில் வழங்கப்பட்டன.
கடந்த சில மாதங்களாக காரைநகரில் உணவகங்கள் மூடப்பட்ட நிலையில் இதனை கேள்வியுற்றதும் உடனடியாக அவர்களிற்காக தற்காலிக உதவியாக மூன்று குடும்பங்களிற்க தலா பத்தாயிரம் வீதம் ஒரே தினத்தில் வழங்கப்பட்டன.
மேலும் கொரோனா சூழ்நிலை நீடித்தால் தொடர்ந்தும் ஒரு சில மாதங்களிற்கு பாடசாலை செல்லும் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு மேற்படி மூன்று குடும்பங்களிற்கும் உதவ முன்வருபவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்தினை தொடர்பு கொள்ளவும்.
416 821 8390



