‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகர் ஊரி கொட்டைப்புலத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக 50,000 ரூபா 16.10.2021 நேற்றைய தினம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
மேற்படி குடும்பத்தின் குடும்ப சூழ்நிலைகளை அறிந்து கொண்ட நிலையில் காரைநகர் சுகாதார உத்தியோகத்தர் திரு.பிரதீப் அச்சு, காரைநகர் ஊரி அ.மி.த.க.பாடசாலை அதிபர் திரு.இராசையா சிறிகரன் மற்றும் ஆசிரியர் திரு.நிமலன் கணபதிப்பிள்ளை ஆகியோர் நேரடியாக சென்று குடும்ப சூழ்நிலைகளை கண்டறிந்து நிதிதியினை கையளித்தனர்.









மூன்று பெண் பிள்ளைகளை கொண்டுள்ள மேற்படி குடும்பத்திற்கு அண்மையில் வீட்டு திட்டத்திற்கான உதவியும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பிள்ளைகளின் கல்வி உதவிக்காகவும் வாழ்வாதார உதவிக்காகவும் மேற்படி உதவி ‘எனது ஊர் காநைரகர்’ ஊடாக வழங்கப்பட்டுள்ளது. ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக இனம் காணப்படுகின்ற உதவிகளிற்கு எம்மோடு தொடர்பு கொண்டு தகுதியானவர்களிற்கு உதவிகளை வழங்க நிதி உதவி அளித்து வரும் இணையத்தள அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் எப்பணியானாலும் இணைந்து செயற்பட ஆர்வத்துடனும் பாகுபாடற்ற வகையில் தகுதியானவர்களை கண்டறிந்து பலனாளிகள் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையிலும் பாடசாலை பிள்ளைகளின் நிலமைகளை கருத்தில் கொண்டும் முன்னெடுக்கப்படும் இந்த திட்டங்களிற்கு உதவிகள் புரிந்து வரும் காரைநகர் சுகாதார உத்தியோகத்தர், ஊரி அ.மி.த.க.பாடசாலை அதிபர் திரு.நிமலன் கணபதிப்பிள்ளை, திரு.செல்வராசா வேலாயுதபிள்ளை ஆகியோருக்கு ‘எனது ஊர் காநைகர்’ சார்பாக மனமார்ந்த நன்றி!
மேற்படி குடும்பமானது சமூக ஊடகம் ஒன்றின் ஊடாக வீடியோ பதிவின் ஊடாக கோரிய உதவிகளை ஆராய்ந்து செயற்படுத்தப்பட்டது. சமூக ஊடகம் ஒன்றின் ஊடாக பெறப்பட்ட வீடியோ பதிவின் ஊடாக பயனாளிகள் இனம் காணப்பட்டதன் காரணமாக குடும்பத்தினரின் புகைப்படங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நன்றி!



