சடையாளி வைரவர் கோயில் திருப்பணி சார்பாக இப்பகுதி வாழ் மக்கள் இணைந்து கடந்த சில மாதங்களிற்கு முன்னர் ஒரு நிர்வாகத்தினை அமைத்துக்கொண்டார்கள். இந்நிர்வாகத்தின் சார்பாக கோயில் நித்தியபூசைக்காக மாதாந்த ஒழுங்குகள் செய்யப்பட்டள்ளதுடன், கோயில் சுற்றுப்புறம் வழமையாக துப்பரவு செய்யப்பட்டு வரப்படுகின்றது.









இந்நிர்வாகத்தின் செயற்பாடுகள் ஊடாக 13.10.2020 அன்று கோயில் கேணி இறைத்து சுத்தமாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 27.10.2020 இன்று கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பெரிய கிணறும், கோயில் தீர்த்தக்கிணறும் இறைத்து சுத்தமாக்கப்பட்டுள்ளது. சடையாளி ஞானவைரவர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளிற்கும் மேலான நிலையில் கோயில் மண்டபம் திருத்தம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்வதற்கும் உரிய ஆலோசனைகளை தற்போதைய நிர்வாகம் வேண்டி நிற்கின்றது.
தற்போதைய கொரோனா காலநிலை மாற்றம் அடைந்ததன் பின்னர் அதற்குரிய ஆயத்த வேலைகளை தொடங்கவுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
நிர்வாகத்தில் இணைந்து கொண்ட உறுப்பினர்களுடன் கேணி, கிணறுகள் இறைத்து சுத்தமாக்கப்படும் புகைப்படங்களும் கீழே எடுத்து வரப்பட்டுள்ளன. நன்றி: அதிபர்



