×

திரு.அம்பலவாணர் கனகசுந்தரம்
(Post master கனகசுந்தரம்)
நடுத்தெரு, காரைநகர்

மறைவு: 20.01.2015
காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய தபாலதிபர் அம்பலவாணர் கனகசுந்தரம் (20.01.2015) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சோதிமணியின் அன்புக் கணவரும் அமரர் அம்பலவாணர் அன்னம்மா தம்பதிகளின் ஆசை மகனும் அமரர் நாகலிங்கம் அருளம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், அற்புதமலர் (கனடா), சிவமலர் (பிரான்ஸ்) அற்புதராசா (ஜேர்மன்) ஆனந்தராசா (காரைநகர்) சிவராசா (பிரான்ஸ்) அன்னமலர் (காரைநகர்)
ஆகியோரின் அன்புத்தந்தையும் அமரர் பாலச்சந்திரன் (பேபி – முன்னாள் ஆங்கில ஆசிரியர் யாழ்ற்ரன்
கல்லூரி) அமரர் ஸ்ரீஸ்கந்தராசா, இராஜதுரை (கிராமசேவையாளர் காரைநகர் J/43) தினமணி, கமலாதேவி, லோகேஸ்வரி ஆகியோரின்
அன்பு மாமனாரும் மீரா, ராகுல், கஜன், ரோஜினி, செந்தூரன், மயூரன், ஆர்த்திகள், அஜிதன், அருந்தா, அமிர்தா, அரிகரன், அரவிந்தன், மதுசன், மதுரா, மதுசங்கர், பவானந்தன், லக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் காரைநகர் நடுத்தெருவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக 22.01.2015 இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் சாம்பலோடை இந்து
மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.
நடுத்தெரு, காரைநகர்.
தொ.பேசி இல 0213209261

கண்ணீர் அஞ்சலி!
திரு.அம்பலவாணர் கனகசுந்தரம்

பிரான்ஸ் வாழ் காரை மக்களின் புலம்பல்

அமரர். அம்பலவாணர் கனகசுந்தரம்

மண்ணில் : 27.04.1926 விண்ணில் : 20.01.2015

தில்லைக்கூத்தன் திருவடியில் அம்பலத்தின்
அன்பில் உதிர்த்த கனகசுந்தரம் ஐயா
கருணையின் வடிவமான சோதிமணியின்
கரந்தனை பற்றி அன்பான அழகிய ஆறு
செல்வங்களை பெற்று வாழ்ந்த அன்பு
வடிவமேயான எங்கள் ஐயா இறைவன்
திருவடியை அடைய ஏன் தான் அவசரம் கொண்டீர்களோ!

மண்ணுலக வாழ்க்கைச்சக்கரத்தில் வாழ்வாங்கு
வாழ்ந்ததுபோதுமென தில்லையம்பலத்தான்
பாத கமலங்களை பற்றிகொள்ள அவசரம் கொண்டீர்களோ!

உங்கள் பிரிவால் துயறுரும் உங்கள் அன்புச்செல்வங்களுக்கு
எப்படி ஆறுதல் கூறுவதென அறியாது வருந்துகின்றோம்.

எம்பிரான் தில்லைக்கூத்தனின் பாதகமலங்களை
சரணடைந்த ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டிநிற்கின்றோம்.

ஓம்சாந்தி!
ஓம்சாந்தி! சாந்தி!!
ஓம் சாந்த!ி சாந்தி!! சாந்தி!!!

பிரான்ஸ்வாழ் காரைமக்கள்
பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கத்தினர்.

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×