பெருமையுடன் நன்றிகளைப் பகிர்கிறோம்!
காரைநகர் பிரதேச சபை தெரிவிக்கும் மகிழ்ச்சிகரமான செய்தி: 30.12.2025
மகுடம் சூடியது காரைநகர்!
பெருமையுடன் நன்றிகளைப் பகிர்கிறோம்!
எமது காரைநகர் பிரதேச சபை, கசூரினா சுற்றுலா மையத்தை சிறப்பாக நிர்வகித்ததற்காக வடமாகாணத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளத்தை நிர்வகிக்கும் உள்ளூராட்சி மன்றமாக (Best Destination Managing Local Authority) தெரிவு செய்யப்பட்டு விருது வென்றுள்ள செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அடைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்:
முன்னாள் மற்றும் தற்போதைய கௌரவ தவிசாளர்கள், கௌரவ உறுப்பினர்கள்: சபையின் கொள்கை முடிவுகளைச் சிறப்பாக முன்னெடுத்து, கசூரினா கடற்கரையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது சபையின் முன்னாள் கௌரவ உறுப்பினர்களுக்கும், தற்போதைய கௌரவ உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகள்.
முன்னாள் மற்றும் தற்போதைய செயலாளர்கள்: பல்வேறு காலகட்டங்களில் நிர்வாக ரீதியாக வழிகாட்டி, இந்த இலக்கை அடைய அடித்தளமிட்ட முன்னாள் செயலாளர்களுக்கும், தற்போதைய செயலாளருக்கும் எமது நன்றிகள்.
உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்: கடற்கரையைத் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பேண இரவு பகலாக உழைத்த எமது சபையின் அனைத்துப் பணியாளர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.
காரைநகர் மக்கள்: எமது ஒவ்வொரு முயற்சிக்கும் பக்கபலமாக இருக்கும் காரைநகர் மண்ணின் மைந்தர்களுக்கும், எமது கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள்.
விதைத்து வளர்த்தவர்கள் யாவர்க்கும் நன்றி









