×

Dr. சபாபதி சபாரத்தினம்
புதுறோட், காரைநகர் (லண்டன்)

பிறப்பு: 06.11.1945 இறப்பு: 21.03.2013

காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் லண்டனை
வசிப்பிடமாகவும் கொண்ட Dr.சபாபதி சபாரத்தினம்
நேற்று(21.03.2013) வியாழக்கிழமை இலண்டனில் காலமானார்.

அன்னார் சபாபதி-சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி
ஆ.தியாகராஜா-மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும், Dr .மங்கையற்கரசியின் அன்புக்கணவரும், மீரா, ராதா ஆகியோரின் தந்தையும், சபாநடேசன், சபாநாதன், சுசீலவதி,சபாநேசன், சபாநாயகம், சிவஞானவதி, சபேந்திரன், சங்கரபிள்ளை ஆகியோரின் சகோதரனும், தனலட்சுமி, சரஸ்வதி, யசோ,
அனுலஜசேகர, திலகவதி, புனிதவதி, ஞானசம்பந்தன், கண்ணன், விநாயகமூர்த்தி, துரைசாமி, சகுந்தலாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பரர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
சபாபதி சங்கரபிள்ளை(சகோதரன்) 0777 57 1776

அல்லது 072 757 1776
181, மானிப்பாய் றோட், யாழ்ப்பாணம்

கலாநிதி சபாபதி சபாரத்தினம் அவர்களின் மறைவையொட்டி காரை அமைப்புக்கள் மற்றும் காரை மன்றங்களின் சார்பில் வெளியிடப்பட்ட
கண்ணீர் அஞ்சலி மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி கல்விச் சமூக்திடம் இருந்து அஞ்சலி கடிதம் என்பன கீழே தரப்பட்டுள்ளன….!


கண்ணீர் அஞ்சலி

தாயகம் காரைநகர் புதுவீதியை பிறப்பிடமாகவும் தற்போது இலண்டனில்
வசித்தவருமான கலாநிதி.சபாபதி சபாரத்தினம் (சபா அண்ணா)
அவர்களுக்கு எமது இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்

Karainagar Viyavil Iynar Thevasthanam

காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானம்


கண்ணீர் அஞ்சலி

Karainagar  S.M Kerniyady  Youths

காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடி இளஞர்கள்


Dr.சபாபதி
சபாரத்தினம்(குஞ்சு)

காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr .சபாபதி சபாரத்தினம் 21.03.2013 வியாழக்கிழமை சிவபதமடைந்துவிட்டார். அன்னார் கடந்த இரண்டு சகாப்தங்களாக சிறப்பாக இயங்கிவரும் காரை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின்
ஸ்தாபகரில் ஒருவரும், பிரான்சு காரை நலன்புரிச் சங்க ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

அன்னார் காரைநகரின் கல்வி, பொரளாதாரம், அபிவிருத்தி தொடர்பாக இறுதி மூச்சுவரை அயராது செயற்பட்டுவந்தார். அன்;னாரது இழப்பு எமக்கும் காரைநகர் மக்களுக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

அன்னாரது பிரிவால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தவர். நண்பர்கள், உறவினர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வரப் பெருமானைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

காரைநகர் அபிவிருத்தி சபை
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம்
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம்
கனடா காரை கலாச்சார மன்றம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம்




போஷகர்: ஐ.தி. சம்பந்தன்

தலைவர்: சு.சரவணபவன்
( 012 5233 2411 )

செயலாளர்:சிவா தி.மகேசன்
(020 8648 7648)

பொருளாளர்: ச. ஞானப்பிரகாசம்
(020 8447 8027)

நிர்வாக அங்கத்தவர்கள்:
பா. ரவீந்திரன்
க. பரமேஸ்வரன்
ச. பிரபாகரன்
திருமதி மார்க்கண்டு
கு. சர்வானந்தலிங்கம்
மு யோகராஜா
வே சண்முகநாதன்
திருமதி வரதராசன்

காரைநகரின் கல்விக் கலங்கரை விளக்கு அணைந்தது

ஒரு கல்விக்குடும்பத்தில்பிறந்து பிறிதொரு கல்விக்குடும்பத்திலே
மணந்து கல்விக்காக மாத்திரமின்றிகாரைநகரின்
முன்னேற்றத்திற்காகவும் தன் பிற்கால வாழ்க்கையினை
முழுமையாக அர்ப்பணித்த கலாநிதி சபாபதி சபாரத்தினம் நேற்று
அதிகாலை மறைந்தார் என்ற துயரச் செய்தியறிந்து
காரைக்கல்விச் சமூகம் ஏனைய காரை மக்களுடன் சேர்ந்து
சோகத்தில் மூழ்கியது.

அமரர் கலாநிதி சபாரத்தினம் அவர்களுடன் பழகிய சில
வருடங்களில் அவரின் பண்புள்ளத்தினையும், சேர்ந்தவர்களை
அணைத்து ஊக்குவித்துப் பொதுப் பணிகளை நிறைவேற்றும்
திறமைகளையும் அறிந்துள்ளேன். காரைநகரைப் பொறுத்த
வகையில் கல்வி சம்பந்தப்பட்ட எந்த விடயத்திலும் ஒருவித
சுயநல நோக்கமுமின்றி அவர் தனது முத்திரையினைப் பதிக்கத்
தவறியதில்லை. அதேபாணியில் 2010ம் ஆண்டு ஆகஸ்டு 22ம்
திகதியன்று இலண்டன்வாழ் யாஃசுந்தரமூர்த்தி நாயனார்
வித்தியாலயத்தினதும் பாலாவோடை இந்து தமிழ்க்கலவன்
பாடசாலையினதும் பழையமாணவர்கள் ஓரு சங்கம்
உருவாக்கியுள்ளோம் என்பதனை அறிந்ததும் எங்களுடன்; தொடர்பு
கொண்டது மட்டுமன்றுி £500 பவுண்களுக்கு ஒரு காசோலையும்
அனுப்பி எங்களை வாழ்த்திய சம்பவம் எங்கள் அனைவருது
உள்ளங்களையும் நெகிழ வைத்தது. இது எதனை எடுத்துக்
காட்டியதென்றால் அமரர்; கலாநிதி சபாரத்தினம் அவர்கள்
காரைநகரின் சிறப்பு மிக்க காரைமைந்தனாகவும் பிரதேச
மனப்பான்மைக்கப்பாற்பட்ட ஒரு பொதுநலவாதியாகவும்
வாழ்ந்துள்ளார் என்பதாகும்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவரது மனைவி, பிள்ளைகள்,
உற்றார், உறவினர்களுக்கு மேற்படி பாடசாலைகளின் பழைய
மாணவர்கள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினைத்
தெரிவிப்பதுடன் அமரர் கலாநிதி சபாரத்தினம் அவர்களின்
ஆத்மா சாந்தியடைய திண்ணபுரத்தான் திருவருள்புரியப்
பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி

      சுப்பிரமணியம் சரவணபவன்
       தலைவர்

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×